மாநிலங்களவையில் அமைச்சர் அமித் ஷா, அம்பேத்காரை அவமதித்ததாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அம்பேத்கரை காங்கிரஸ் கவுரவப்படுத்தவில்லை, நேரு அம்பேத்கரை வெறுத்தார் என்று எல்லாருக்கும் தெரியும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கூடாது என்று காங்கிரஸ் எதிர்த்தது. அதனால் அவர் அந்த கட்சியை இழந்த பின்னர் தான் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. நான் பேசிய ஒரு பகுதியை மட்டும் வைத்து அவர்கள் குறை கூறுகின்றனர்.

உண்மையை மாற்றி பேசுவதே காங்கிரசின் வேலை. காங்கிரஸ் கட்சி அம்பேத்கர், இட ஒதுக்கீடு, அரசியல் அமைப்பு என எல்லாத்துக்கும் எதிராக உள்ளது என்பதை பாஜக பேச்சாளர் நாடாளுமன்றத்தில் நிரூபித்தார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை பிரித்துக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் நான் பேசியதை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது. பாஜகவினர் ஒருபோதும் அம்பேத்கரை அவமதித்ததில்லை, அவரது கொள்கைகளை பாஜக பின்பற்றி வருகிறது. என்னுடைய ராஜினாமா காங்கிரஸ் கட்சியின் எந்த பிரச்சனையையும் தீர்க்கப் போவது இல்லை என்று கூறினார்.