
கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஸ்ரீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் திமுகவினர் அரசியல் லாபத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில், அன்னபூர்ணா உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தானாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதாகவும், ஆனால் திமுகவினர் இதை திரித்து பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தை தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திமுகவினர் பரம்பரை பரம்பரையாக பொய் பிரசாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய வானதி சீனிவாசன், பாஜக தொண்டர்களை இந்த விவாத்தை மேலும் பெரிதுபடுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.