
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறுவதாக இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்த நிலையில் அவர்கள் 21 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு தமிழக வெற்றி கழக கட்சியின் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இன்று புஸ்ஸி ஆனந்த் 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காவல்துறையினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் காவல்துறைனருக்கு எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கி விட்டோம். அவர்கள் 2 அல்லது 3 நாட்களில் கலந்தாய்வு செய்த பிறகு முடிவை சொல்வதாக தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் முதல் மாநாடு குறித்த தேதியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு சிறார்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை என்று புஸ்ஸி ஆனந்த உறுதிபட கூறினார்.
அதன்படி ஆண்கள் 30,000 பேர், பெண்கள் 15,000 பேர், முதியவர்கள் 5000 பேர், மாற்றுத்திறனாளிகள் 500 பேர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை சுமார் 50000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் தங்களுடன் சிறியவர்களை அழைத்து வர வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.