
மேலூர் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் சட்டப்பேரவைத் தீர்மானத்தால் ரத்து செய்யப்படவில்லை. மண்ணின் மைந்தர்களின் அழுகைக்காக டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
எப்போதும் தமிழகத்திற்கு தோழனாக பிரதமர் மோடி இருப்பார். மண்ணின் மைந்தர்களுக்காக பிரதமர் மோடி திட்டத்தை ரத்து செய்துள்ளார். சட்டசபையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து தொடர்பாக மதுரையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.