
சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தாம்பரம் அடுத்து செங்கல்பட்டு நோக்கி சென்ற போது ரயிலின் பி1 பெட்டியில் பயணித்த ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது கரும்புகை வெளியேறியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பழுது சரியான பிறகு 10 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.