
என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, DMKகாரர்கள் குழந்தைகளை போய் நிப்பாட்டி, குழந்தைகள் கிட்ட கையெழுத்து வாங்கி என்னய்யா பண்ண போறீங்கன்னா ? நாங்க நீட் பரீட்சையை ரத்து பண்ண போறோம்… எதுக்கு நீட் பரீட்சை ரத்து பண்ண போறீங்க ? திமுக நண்பர்கள் நடத்தக்கூடிய தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் இல்லை அப்படின்னா மறுபடியும் டொனேஷன் வாங்கிக்கிட்டு சீட்டு கொடுக்க ஆரம்பித்துவிடலாம்…. அதான உங்க பிளான்…
2016 க்கு முன்பு எப்படி திமுக நடத்தக்கூடிய தனியார் மருத்துவக் கல்லூரிக்கு…. எந்தவித என்ட்ரன்ஸ் எக்ஸாம் இல்லாமல் அல்லது போலி என்ட்ரன்ஸ் எக்ஸாம் நடத்திட்டு…. சீட்டை எல்லாம் விற்று நான்கு கோடி, ஆறு கோடி சம்பாதிக்க வேண்டும் என்ற காலத்திற்கும் மறுபடியும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று திமுக நினைக்கிறார்கள்.
அதனால் சகோதர, சகோதரிகளே…. நம்முடைய அரசியலைப் பொருத்தவரை… ஏழை மக்களை முன்வைத்து….. விவசாய மக்களை முன்வைத்து…. இளைஞர்களை முன் வைத்து…. நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக எப்படிப்பட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்களோ, உங்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக வந்திருக்கின்றேன் என தெரிவித்தார்.