
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக சாத் ஷகீல் 68 ரன்கள் அடித்துள்ளார். பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார்.
முன்னதாக இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. பாபர் அசாமின் விக்கெட்டை எடுத்து அவர் கொண்டாடிய போது ரசிகர்கள் அவர் கட்டியிருந்த வாட்சை கவனித்தனர். கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் களத்தில் வாட்ச்களை அணிவதில்லை. இது பலரது மத்தியில் பேசும் பொருளாக மாறியது பின்னர் இந்த வாட்ச் குறித்து சில செய்திகளும் வெளியானது. அதில் ஹர்திக் பாண்ட்யா கட்டியிருந்த வாட்ச்யின் மதிப்பு ஏறக்குறைய 7 கோடி என்றும் ரிச்சர்ட் மில்லே ஆர்எம் 27-02 வகையைச் சேர்ந்தது என்றும் உலகிலேயே இந்த வாட்ச் வெறும் 50 எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.