கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…
Read more“75 வயது மூதாட்டிக்கு சித்திரவதை…” மகனை இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில், 49 வயதான அழகப்பன் மற்றும் அவரது 75 வயதான தாய் சொர்ணம் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். ஜூன் 16 ஆம்…
Read more