
CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை பொது தேர்வு நடத்தப்படுகின்றது. இதன் நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் மன அழுத்தங்களை குறைப்பதற்காக 2026 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனை ஏற்று முதல் தேர்வை பிப்ரவரி மாதத்திலும் இரண்டாவது தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்தி ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சிபிஎஸ்இ அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.