மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் முராரி லால் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இவர் ₹20,000 முன்பணம் செலுத்தி டி.வி.எஸ் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதில் பைக் வாங்கும் முன்பே டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிபடியே பைக் ஷோரூமுக்கு பைக்கை வாங்க சென்றுள்ளார். அங்கு பைக்கை முன் பணம் கொடுத்து வாங்கிய பின்பு ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கிக்கொண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் தனது குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்வதற்காக இவ்வாறு நடந்து கொண்டதாக முராரி லால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இவர் இவ்வாறு செய்வது ஒன்றும் முதன் முறையல்ல 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு ₹ 12,500 கடன் வாங்கி மொபைல் போன் வாங்கி கொடுத்ததன் பின்பு ₹ 25 ஆயிரம் செலவு செய்து மொபைல் போன் வாங்கியதை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.