நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த முறை நிர்மலா சீதாராமன் 7-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இதனால் அவர் இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இதற்கு முன்பாக மொரார்ஜி தேசாய் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்து இந்தியாவில் அதிகம் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றிருந்தார். மேலும் இவருடைய சாதனையை தற்போது முறியடித்து நிர்மலா சீதாராமன் அதிக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார்.