மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை பொருத்தவரை என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பல்வேறு துறையினரும் தொழிற்சங்கங்களும் பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்துள்ள சில முக்கிய கோரிக்கைகள்:

புதிய பணியிடங்கள்:

அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்து வரி:

பணக்காரர்களுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும் என்றும் இந்த பணத்தை ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு:

சம்பள வர்த்தகத்தினர் வருமான வரியில் கூடுதல் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்கள்:

மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் எட்டாவது ஊதிய குழு அமைக்கப்பட்டு  விரைவில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது .

ஒப்பந்த தொழிலாளர்கள்:

ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டம்:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிதி அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.