
மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று பல மாநில தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அப்போது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அண்ணா, மற்றும் பெரியார் குறித்து அவதூறான வீடியோ வெளியானது.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்.