தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதாவது காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. திருவாரூரில் 7 சென்டிமீட்டர் மழையும், நாகையில் 6 சென்டிமீட்டர் மழையும், விருதாச்சலம், பரங்கிப்பேட்டையில் தலா 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.