
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.