
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படத் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் ஒன்றிய அரசு நிதி வழங்கியது என்று தெரிவித்தார்.