
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்த பிறகு அமைச்சர் டிஆர்பி ராஜா பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டை போல் ஒடிசாவையும் பாதிக்கும் என எடுத்துரைத்தோம்.
இது எந்த ஒரு கட்சி சார்ந்த பிரச்சனையும் அல்ல. மாநிலம் சார்ந்த பிரச்சினை என விளக்கினோம். இந்த முக்கிய முன்னெடுப்புக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.