
சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
நாளை மாலை முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்துகின்றனர். முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயனளிக்க கூடிய வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.