உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் புனித பயணம் மேற்கொண்டிருந்த 30 தமிழர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வர முடியாமல் தவித்தனர். அதாவது ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து 30 பேர் புனித பயணம் சென்றிருந்த நிலையில் நிலச்சரிவின் காரணமாக அங்கு சிக்கித் தவிப்பதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் இப்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் 30 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாகவும் அவர்கள்  ஹெலிகாப்டர் மூலமாக தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வானிலை நன்றாக இருந்தால் இன்று ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து வரப்படுவார்கள் என்று கலெக்டர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.