
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது வைகோ அவருடைய வீட்டில் தவறி விழுந்ததில் கைவிரலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல் நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தகவல் மதிமுக கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.