தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட ரூ‌.12,110‌.74 கோடியில் ரூ‌.10,336.40 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும் 2025 26 ஆம் நிதி ஆண்டில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக 1472 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.