25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் சில்லறை விலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. 25 கிலோ மட்டும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெறும் வகையில் அரிசி விற்பனையாளர்கள் 26 கிலோ எடை மூட்டையில் அவற்றை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 25 கிலோவுக்கு மேல் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை பைகளில் அடைத்து விற்கும் போது அவற்றை விவசாய பண்ணை விளை பொருள் அல்ல என்று ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. இதனை மத்திய மறைமுக வரிகள் வாரியம் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து உத்தரவு வரும் என்றால் 26 கிலோவுக்கு மேல் பைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.