ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணிக்காக விளையாடும் பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கை ரூ.2.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது விராட் கோலியை அவர் BOWLED ஆக்கியது அப்போது பேசுபொருளானது.