தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உட்பட இரண்டு பேர் ஹாஸ்பிடலில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் வாசு ராமநாதன், கவின் குமார், மதன்குமார் மற்றும் தனஞ்ஜெயன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் அவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.