ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர், மணியம் உள்ளிட்டோர் நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள், உட்படாத கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களில் அடையாளம் காணவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.