இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரிகளான லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் ஏ கே பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இது பற்றி அவர்கள் கூறும்போது பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. மே 10-ம் தேதி மாலை 3.35 மணியளவில் இருநாட்டு டிஜிஎம்ஓக்களும் பேசினோம். ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக சில மணி நேரத்தில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தினால் சும்மா விடமாட்டோம். மேலும் ராணுவ அதிகாரி எங்களுக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளதால் கண்டிப்பாக அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினர்.