இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசா எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றார்.

இதனையடுத்து இன்றும், நாளையும் மற்ற மக்களவை உறுப்பினர்களுக்கு பர்த்ருஹரி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். ஆனால் சபாநாயகர் நியமனத்திற்கு INDIA கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.