மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் மொழி மேம்பாட்டு நிதியின் கீழ் 2532.59 கோடியை ஒதுக்கியுள்ளது. இதேபோன்று பிற மொழிகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டது.

அந்த பதிவை முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து போலி பாசம் தமிழுக்கு. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு. சமஸ்கிருதத்திற்கு மட்டும் கோடிகளை ஒதுக்கியுள்ள மத்திய அரசு தென்னிந்திய மொழிகளுக்கு ஒன்றும் ஒதுக்கவில்லை. எல்லாம் வெறும் முதலை கண்ணீர் தான் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.