
சென்னையில் பூர்விகா மொபைல் உரிமையாளரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா உரிமையாளரின் வீடு , கடைகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீடு மற்றும் பல்லாவரம் பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பூர்விகா சென்னையில் அமைந்துள்ள நிலையில் அதன் கிளைகள் தமிழகம முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.