பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,  கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐயா ஐயாவாக இல்லை. ஐயாவாக இருந்து எதனை சொல்லி இருந்தாலும் கண்களை மூடி கொண்டிருப்பேன்.

வயது முதிர்வின் காரணமாக ஐயா குழந்தையாக மாறிவிட்டார். சமூக ஊடகங்களில் ராமதாஸ் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். ஐயாவை அவருடன் இருக்கும் மூன்று பேர் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டதால் தலைவர் பதவிக்கு நான் வந்தேன்.

ராமதாஸுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு ராமதாஸ் கூறினார். ராமதாஸ் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன்.

விசிக, காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? ராமதாஸ் மீது வன்னி அரசு ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. என்றைக்காவது ராமதாசை திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார். ராமதாசை செல்வப் பெருந்தகை திடீரென சந்திப்பது ஏன்? இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாமகவின் முழு அதிகாரம் எனக்குத்தான் உள்ளது. பொதுக்குழுவை கூட்டவும் கட்சியை நடத்தவும் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்கிற சட்ட விதி கிடையாது.

இரண்டு மாதங்களாக பாமகவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்த செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டது. நான் பேசாமல் இருப்பதால் அவர்களுடைய கருத்து மட்டுமே மேலோங்குவது போல தோன்றுகிறது. ஆனால் தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும் என கூறியுள்ளார்.