
பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா காவல்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை தற்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதாவது மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக எச். ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை அவர்கள் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எச். ராஜாவுக்கு உத்தர விட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக காவல்துறை விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்.