
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை குறித்து அண்மை காலத்தில் கிடைத்துள்ள ஆதாரங்களை முன்வைத்து, இந்தியா, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) ஒரு சிறப்பு குழுவை அடுத்த வாரம் அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், UNSCR 1267 தடைகள் குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
India to send a team to the United Nations Security Council (UNSC) with the latest evidence of Pakistan’s complicity with terrorism. Next week, the UNSCR 1267 sanctions committee will meet: Sources pic.twitter.com/KEFi17kdwc
— ANI (@ANI) May 11, 2025
இந்த குழுவில், ஜெய்ஷ்-எ-முகமது, லஷ்கர்-எ-தய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை ஆதரித்தது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இந்தியா தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு உறுதிப்பத்திரம் அளிப்பதை உலகமே கவனிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தி வருகிறது.