
சென்னை பெரம்பூரில் நேற்று லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை மாநகர கமிஷனர் அருண் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படும் வாகனங்கள் குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி தரப்பட மாட்டாது.
அதன் பிறகு காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பள்ளிகள் உள்ள பகுதிகளுக்கு கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது.
இந்த உத்தரவினை மீறி அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று பத்து வயது பள்ளி மாணவி சௌமியா லாரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக போலீஸ் கமிஷனர் அருண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேலும் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாக குடிநீர் லாரி ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.