
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மீது மோதி விபத்துக்குள்ளானது நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பிறகு முதல் முறையாக லண்டனுக்கு விமானம் இயக்கப்பட இருந்தது. கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.