மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லாம்பெல் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாம் உள்ளது. இங்கு சஞ்சய் குமார் என்ற வீரர் தன்னுடைய சகவீரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர் துப்பாக்கியால் எதற்காக சுட்டார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் மணிப்பூர் மாநில முதல்வர் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கு 2 வருடங்களாக பெரும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.