நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் புதிய வரி விதிப்பு முறை குறித்து அறிவித்துள்ளார். இந்நிலையில் பட்ஜெட்டில் அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலீடுகளை பெருக்கவும் வளர்ச்சிகளை மேற்கொள்ளவும் வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.