எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்ற விமர்சித்தார். அதாவது திமுக கட்சிக்காக பல வருடங்களாக பாடுபட்டவர்கள் இருக்கும்போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக துணை முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினார்கள் என்று கேட்ட அவர் உழைப்பவர்களுக்கு திமுகவில் மரியாதை இல்லை என்று கூறினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மகனான உதயநிதி மீது மட்டும்தான் கவனம் செலுத்துவதாகவும் அவருக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் திமுகவில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பெயில் ஆகிவிட்டனரா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு அவ்வப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக சவால் விட்டுள்ளார்.

அதாவது எடப்பாடி பழனிச்சாமி என்னை அழைத்தால் அவருடன் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி பெயரில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தேவையில்லாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியதோடு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் நிதி ஒதுக்காமல் பாதியில் பணிகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சி நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி என்னுடன் விவாதிக்க தயாரா என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.