தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக அடிக்கடி தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வளர்ந்து வரும் கட்சியான நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மிகவும் வலுவாக இருக்கும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.