
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
அவரிடம் தவணை முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக அமமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனிவேல் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.