நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி சமீப காலமாக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.