
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை, பாகிஸ்தானவர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சமீபத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்து பயங்கர ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் போர் சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை மறுதினம் ஒத்திகை நடத்துமாறு பல மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்தால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.