தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவரும் நிலையில் சமீபத்தில் இவரை போலீசார் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்தனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நிலையில் தனக்கு அதனை பயன்படுத்த கற்றுக் கொடுத்தது அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிரசாந்த் சிறையில் இருக்கும் நிலையில் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன்பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்ய முடிவு செய்து 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். நடிகர் கிருஷ்ணா கேரளாவில் இருக்கும் நிலையில் அவரது செல்ஃபோன் ஸ்விச் ஆஃப் ஆக உள்ளது.

இதன் காரணமாக சைபர் கிரைம் மூலமாக அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்ய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்துள்ளனர். மேலும் இதன் காரணமாக நடிகர் கிருஷ்ணா விரைவில் கைது செய்யப்படும் நிலையில் இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.