
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அதாவது கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அந்த படத்தை அங்கு வெளியிடவில்லை.
இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர் மன்னிப்பு கேட்டால் தான் படத்தை வெளியிட முடியும் என கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து கர்நாடகா திரைப்பட சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் படத்தை வெளியிட்ட பாதுகாப்பு வேண்டி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதாவது படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் பாதுகாப்பு வழங்கவும் கர்நாடகா தேர்தல் சங்கம் சார்பில் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியுள்ளது.