
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதை ஆகிவிட்டது. நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களை எல்லை தாண்டி மேம்படுத்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் இன்று 13 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை படகும் மோதியதில் இரண்டு மீனவர்களுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.