தென்காசி மாவட்டம் முன்னாள் பாஜக செயற்குழு உறுப்பினர் நீலகண்டன். இவரது குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடைய மகளுடன் கடந்த 2023 ஆம் ஆண்டு நீலகண்டன் வீட்டிற்கு சென்ற நிலையில் துப்பாக்கி முனையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்தார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை வைத்து அவர்களை நீலகண்டன் மிரட்டினார்.

பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீலகண்டன் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் படி ஆலங்குளம் காவல்துறையினர் நீலகண்டன் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் அவர் மும்பையில் இருந்த நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.