திமுக கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒருமுறை உடல் நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நலம் பெற்று வீடு திரும்பினார். ஆனால் தற்போது மீண்டும் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.