தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு தற்போது திரைத்துறையில் சிறந்து சேவை ஆட்சி எதற்காக பத்மபூஷண் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதா அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு மொத்தம் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் விருதைப் பெறுகிறார்கள்.

இந்நிலையில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசாத் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவாயூர் துரை, தாமோதரன் சீனிவாசன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரசை கண்ணப்ப சம்பந்தன், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், தேவ சேனாதிபதி, சீனி விஸ்வநாதன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மொத்தம் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.