தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு மதுராந்தகத்தில் நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசி வருகிறார். அதோடு இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி,

வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்

கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படும்

உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும்

சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற மாநகராட்சிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போல, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் அமைக்கப்படும்

வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் உருவாக்கப்படும். 22 சேவைகளை இதன் மூலம் வணிகர்கள் பெற்றுக்கொள்ளலாம்

அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

மேலும் ஒவ்வொரு வருடமும் மே 5-ம் தேதி வணிகர் நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.