
பிரதமர் மோடி வருகிற 6-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வர உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.
ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, பேரிடர் நிதி ஒதுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.