புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 கிராம் தங்க நகைக்காக சித்தி மகள் லோக பிரியாவை கத்தியால் குத்தி இரும்பு ராடால் தாக்கி லட்சுமணன் (32) என்பவர் கொடூரமாக கொலை செய்தார். இவர் தங்கநகைக்காக சித்தி மகள் அதாவது தங்கை என்று கூட பாராமல் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது லட்சுமணனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.